


Health & Wellness
12 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது
பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி என்பது இன்றைக்கு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. பெண்கள் பருவம் எய்திய உடனேயே துன்புறுத்தக் கூடியதாக இது அமைகிறது. கர்ப்பப்பை கட்டி என்பது கர்ப்பப்பையை சுற்றி அல்லது சில சமயம் அதன் உள்ளேயும் வளரக் கூடிய கட்டிகள் ஆகும். இந்த அசாதாரணமான வளர்ச்சியை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இவ்வாறு பிரிப்பதால் இந்த திரவத்தால் ஏதேனும் விளைவுகள் உண்டா என்பதை கண்டறிவதற்கு எளிமையாக இருக்கும். பகுதியளவு திடமான அளவில் இருக்கும் கட்டிகளே கர்ப்பப்பை கட்டி எனப்படுகிறது.
கர்ப்பப்பையில் உருவாகும் கட்டி மற்றும் அதன் அறிகுறிகளை எதிர்கொள்வது சவால் மிகுந்ததாக இருக்கும். வெகு முன்னதாகவே மருத்துவ சிகிச்சை தேவைப்படும். கர்ப்பப்பை கட்டி வளருகின்ற ஆரம்ப கால கட்டத்தில் அல்லது ஆண்டுகளில் பல பெண்களுக்கு இதன் அறிகுறிகளே தெரியாது. எனவே, தக்க தருணத்தில் இதற்கு தேவையான சிகிச்சை மற்றும் தெரஃபிக்களை எடுக்க முடியாத கவலைகள் அதிகரிக்கின்றன.
வெவ்வேறு வகையான கர்ப்பப்பை கட்டிகள் குறித்து இங்கே மிக விரிவாகக் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டி வளருவதற்கான காரணம், தெரியவரும் அறிகுறிகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபருக்கு தகுந்த சிகிச்சை முறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை தெரிந்து கொள்ளும்போது உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அணுக முடியும்.
கர்ப்பப்பை கட்டிகள் பொதுவாக கீழ்கண்டவாறு பிரித்து அறியப்படுகின்றன:
ஃபங்க்ஷனல் கட்டிகள்
பேதோலாஜிக்கல் கட்டிகள்
ஃபங்க்ஷனல் கட்டிகள் என்பது வழக்கமான மாதவிலக்கு உதிரப்போக்கு சமயத்தில் வளரக் கூடிய கட்டிகள் ஆகும். இந்த கட்டிகள் பெரும்பாலும் ஆபத்து இல்லாதவை மற்றும் நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்காது. இதற்கு மாறாக, இரண்டாம் வகையான பேதோலாஜிக்கல் முறையில், அசாதாரணமான வகையில் செல்கள் வளர்ச்சி அடையும். அவை தான் கர்ப்பப்பை கட்டிகளாக மாறும். இந்த பேதோலாஜிக்கல் கட்டிகள் எப்போதாவது தான் ஏற்படக் கூடியவை என்றாலும், நம் உடலுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடியது. இந்த கட்டியை மேலும் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
இது புற்றுநோய் செல்களாக வளரும் வகையிலான ஆபத்து முற்றிலும் இல்லாதவை.
இவை புற்றுநோய் கட்டிகள் என்று வகைப்படுத்தப்படுகிறது.
எனவே, கர்ப்பப்பை கட்டிகள் ஆபத்தானதா என்ற கேள்வி உங்களுக்குள் எழுகிறது என்றால், ஆமாம், அவை தீங்கான கட்டிகளாக இருந்தால் ஆபத்தானது தான் அல்லது கர்ப்பப்பையை சுற்றியிலும் பெரிய அளவுக்கு கட்டிகள் வளர்ந்தாலும் ஆபத்து தான். கர்ப்பப்பை உள்ளே காணப்படும் பிற வகை கட்டிகள்:
சிஸ்டடெனோமா
டெர்மாய்டு கட்டிகள்
கர்ப்பப்பை உள்ளே ஏற்படும் கட்டிகள் என்றால் என்னவென்று புரிந்து கொள்ளும் அதே வேளையில், அதற்கான காரணங்களை தெரிந்து கொள்வதும் உங்களுக்கு உதவிகரமாக அமையும்.
கர்ப்பப்பை கட்டி வளர்ச்சி குறித்து நீங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றால் முதலில் கர்ப்பப்பை கட்டி என்றால் என்னவென்று புரிந்து கொள்ள வேண்டும். மேலும், இந்த கட்டி வளருவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெண்ணுக்கு கர்ப்பப்பையின் உள்ளே கட்டிகள் ஏன் வளருகின்றன என்பதற்கு பொதுவான காரணங்கள் இவை:
உடலின் ஹார்மோன்களில் ஏற்படக் கூடிய குறிப்பிடத்தக்க மாற்றங்களால் பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் என்ற நோய் உருவாகிறது. இது பொதுவாக PCOS என்று அழைக்கப்படுகிறது. இந்த சூழலில், கர்ப்பப்பை உள்ளே ஃபாலிக்கில்ஸ் என்ற வகையில் எண்ணற்ற கட்டிகள் உருவாகின்றன. இவற்றை குணப்படுத்துவது சவால் மிகுந்ததாக உள்ளது.
கர்ப்பப்பையில் கட்டிகள் வளருவதற்கான மற்றொரு பொதுவான காரணம் எக்டோபிக் இடங்களில் கருப்பை திசுக்களின் அழுத்தம் ஏற்படுவது தான். கூடுதலாக, கர்ப்பப்பை உள்ளே கட்டிகள் வளர ஊக்குவிக்கும் காரணங்களில் ஒன்று உடலில் உள்ள ஹார்மோன்களின் மாற்றம் ஆகும். அதேபோல கருச்சிதைவு அல்லது 35க்கு மேற்பட்ட வயதில் கர்ப்பம் அடைவது மற்றும் இடுப்புப் பகுதியில் கடுமையான தொற்று காரணமாகவும் கட்டிகள் உருவாகும்.
கர்ப்பப்பை கட்டிகள் தொடர்பாக வெளிப்படையின்றி தோன்றும் பல அறிகுறிகளை புறக்கணித்து விட முடியாது. கர்ப்பப்பை கட்டியின் அறிகுறிகள் தாமதமாக தோன்றினாலும், இந்த நோய்க்கான மருத்துவ வரலாறு கொண்ட நபருக்கு, சின்ன மாற்றம் தென்பட்டாலும் உடனடியாக பரிசோதனை செய்து, தொடக்க நிலையிலேயே சிகிச்சை பெற வேண்டும்.
தொடக்க காலத்தில் ஏற்படும் சில அறிகுறிகள் மற்றும் நோய் முற்றிய காலங்களில் ஏற்படும் அறிகுறிகளில் சில:
மாதவிலக்கு சுழற்சியில் சீரற்ற தன்மை; விரைவான அல்லது தாமதமான மாதவிலக்கு
இடுப்புப் பகுதியில் வலி. ஒவ்வொரு தருணத்திலும் தீவிரமாக வலி ஏற்படுவது
சிறுநீர் கழிப்பது அதிகரிப்பு
வயிறு உப்புசம் மற்றும் வயிறு வீக்கம்
பாலியல் உறவு கொள்ளும்போது மிதமானது முதல் தீவிர வலி
மலம் வெளியேறும் நடவடிக்கையில் மிகுந்த சிரமம் மற்றும் வலி
போதுமான அளவு உணவு சாப்பிடாமலேயே வயிறு முழுமை அடைந்த உணர்வு
அடிவயிற்று பகுதியில் தொந்தரவு அல்லது வலி
கர்ப்பம் அடைவதில் சிக்கல் மற்றும் குறைப்பிரசவம் போன்ற கர்ப்பம் சார்ந்த பிரச்சினைகள்
எனினும், கர்ப்பப்பை கட்டி காரணமாக உடலில் பாதிக்கப்படும் செயல்பாடுகளில் கர்ப்பம் சார்ந்தவை மிக குறைவு என்று மருத்துவ வல்லுநர்கள் கண்டறிந்துள்ளனர்.
சில சமயம், அறிகுறிகளை சரியான சமயத்தில் கண்டறியாவிட்டால், அதனால் மிகுந்த பாதிப்புகள் ஏற்படும். கர்ப்பப்பை கட்டி காரணமாக கீழ்காணும் தீவிரமான விளைவுகள் ஏற்படலாம்:
நீண்ட காலமாக வளர்ந்து வரும் கட்டியானது அளவில் பெரியதாகவும், பருமன் கொண்டதாகவும் மாறுகிறது. இதனால், அது வெடிக்கக் கூடிய அபாயம் ஏற்படுகிறது. இந்த வெடிப்பு காரணமாக ரத்தக்கசிவு ஏற்படும் நிலையில், இடுப்புப் பகுதியில் கடுமையான வலி ஏற்படுகிறது.
கட்டியின் அளவு அதிகரிக்கும்போது, கர்ப்பப்பையின் இடம் மாறுகிறது. இதனால் கர்ப்பப்பை முறுக்கப்பட்டு, மிகக் கடுமையான வலி ஏற்படுகிறது. இதனை கர்ப்பப்பை முறுக்குதல் என்று கூறுகின்றனர். இதனால், அறிகுறிகள் தென்பட்ட தொடக்க காலத்திலேயே, கர்ப்பப்பை கட்டிக்கு மிகச் சரியான சிகிச்சை அளிப்பது அவசியமாகிறது.
கர்ப்பப்பை கட்டிகளை முழுமையாக குணப்படுத்த, அதன் வலியில் இருந்து நிவாரணம் தர அல்லது அவற்றை மட்டுப்படுத்த பல கட்ட சிகிச்சைகளை மருத்துவ நிபுணர்கள் வழங்குவார்கள். எனினும், நோயாளியின் வயது, அவர் மெனோபாஸ் அடைந்துவிட்டாரா இல்லையா, கட்டியின் அளவு என்ன மற்றும் முந்தைய அறிகுறிகள் என்ன என்பது உள்ளிட்ட புறக்காரணிகளின் அடிப்படையில் சிகிச்சை முறை மாறும்.
இதையும் படிக்கலாமே! - தாமதமாக கருத்தரித்தல் காரணங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டியவை
புதிய கட்டிகள் உருவாகுவதை தடுக்கும் வகையில், கருமுட்டை வெளியேற்றத்தை தடுப்பதற்காக வாய்வழி மருந்துகள் கொடுக்கப்படும்.
கர்ப்பப்பையில் இருந்து கட்டிகளை முழுமையாக அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை முறைகள்
இடுப்பு பகுதி அல்லது அடிவயிற்று பகுதியில் கடுமையான வலி, மூச்சுத்திணறல், உடல் பலவீனம் அல்லது உடல் வெப்பம் திடீரென்று அதிகரிப்பது என கர்ப்பப்பை கட்டிக்கு உண்டான திடீர் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும். முந்தைய பரிசோதனைகளில் கர்ப்பப்பை கட்டிகள் இல்லை என்றாலும், இந்த அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் மருத்துவரை அணுக வேண்டும்.
கர்ப்பப்பை கட்டிகள் குறித்து பெண்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் மற்றும் பெண்மை சார்ந்த விஷயங்களில் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வருமுன் காப்போம் முறையை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வபோது போதிய கால இடைவெளியில் பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips











வேகமான இதயத் துடிப்பு (டாக்ரிக்கார்டியா) பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்

சருமம் தொய்வடைவதைத் தடுக்க வல்ல 6 சிறந்த வழிகள்

அனென்ஸ்பாலி (Anencephaly): காரணங்கள், அறிகுறிகள், ஆபத்து மற்றும் சிகிச்சை(Anencephaly: Causes, Symptoms, Risk & Treatment In Tamil)

உங்கள் குழந்தையின் இழப்பிலிருந்து உணர்ச்சி ரீதியாக உங்களை மீட்டெடுக்க உதவும் 8 படிகள் (8 Steps to Help You Recover Emotionally from the Loss of Your Baby In Tamil)

கர்ப்ப காலத்தின் போது, முடி கொட்டுவது இயல்பானதா, அதனை எவ்வாறு சமாளிப்பது? (Is it normal to experience hair fall during pregnancy, and how to deal with it In Tamil)

பிரசவத்திற்கு பிறகு தொப்பை கொழுப்பை இயற்கையான முறையில் குறைப்பது எப்படி?