


Pregnancy
19 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
கருத்தரிப்பு காலம் என்பது பெற்றோர்கள் இருவரும் இணைந்து பயணிக்கும் பயணம் என்றாலும், குழந்தையின் தாய் சற்று முன்னிலை வகித்து அவர்கள் வாழ்வில் ஓர் அழகான குழந்தையைக் கொணர்வதில் பெறும் பங்கு வகிக்கிறார். கருவில் உள்ள குழந்தையின் முதல் இதயத் துடிப்பைக் கேட்க பெற்றோர்கள் மிக ஆவலோடு இருப்பார்கள் என்பது நம்மில் பலர் உணர்ந்து அனுபவித்ததே. குழந்தையின் இதயத் துடிப்பைக் கேட்பது மகிழ்ச்சி தருவதோடு குழந்தை நலமாக இருப்பதையும் அது உறுதி செய்கிறது. குழந்தையின் இதயத் துடிப்பை கேட்க நேர்வது கருக்கலைப்பு ஏற்படும் வாய்ப்பு இனி மிகக் குறைவு என்பதையும் தெளிவாக்குகிறது.
கருவின் இதயத்துடிப்பு கேட்காமை அல்லது தாமதமாகக் கேட்பது முதலியவற்றிற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்தக் கட்டுரையில் தாமதமான இதயத் துடிப்பு இருப்பதற்கான காரணங்களை அறிவோம்.
கருவின் இதயத்துடிப்பு 6 வாரங்கள் வரை கேட்காமல் இருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெற்றோர்கள் இக்காரணங்களை அறிவது மனக் கவலையின்றி கர்ப்பகாலத்தைச் சுமூகமாக நடத்திச் செல்ல தயாராக உதவியாக இருக்கும். கர்ப்ப காலத்தில் தாமதமாக இதயத்துடிப்பு ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
கர்ப்பம் உறுதியாக இருப்பினும் ஏழு வாரங்களுக்குக் குறைவான கர்ப்பகாலம் வரை இதயத் துடிப்பை அறியமுடியாது. ஏழு வாரங்களுக்குப் பிறகுதான் டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் இதயத் துடிப்பைக் கேட்கமுடியும். ஆனால், வயிற்று அல்ட்ராசவுண்ட்டைப் பொறுத்தவரை இதயத் துடிப்பு அறிய அதிக காலம் எடுக்கும்.
தாய் 8 வார கர்ப்பமாக இருந்து, குழந்தை நன்கு வளர்ந்து கொண்டிருந்தும் இதயத் துடிப்பை அறியமுடியவில்லை என்றால், டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் இதயத் துடிப்பைக் கண்டறிவது சிறந்த வழியாகும். கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் வயிற்று அல்ட்ராசவுண்டுடன் ஒப்பிடும்போது டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் இதயத் துடிப்பைக் கண்டறிய சிறந்த முறையாகும். ஹேண்ட் ஹெல்ட் டாப்ளர் முறை மூலம் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கு கருத்தரித்து 10 வாரங்களுக்கு மேல் இருக்க வேண்டும்.
ஏழு வார கர்ப்பத்துக்குப் பிறகும் டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மூலம் இதயத் துடிப்பை அறிய முடியவில்லை என்றால், கர்ப்பம் ஏற்பட்டதாக உணர்ந்த தேதிகள் தவறாக இருக்கவும் வாய்ப்புண்டு. சூலாக்க முறையின் ஆரம்ப நாட்களில், சிறிது குறைவு அல்லது சீரற்ற முறையின் காரணமாக இந்த வித்தியாசம் ஏற்படலாம். எனவே, அல்ட்ராசவுண்ட் மூலம் இதயத்துடிப்பு அறியப்படவில்லையே என பயப்படுவதற்குப் பதிலாக, பெற்றோர்கள் மருத்துவருடன் கலந்தாலோசித்து, சிறிது காலம் கழித்து மீண்டும் அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.
இடுப்புப் பகுதியில் கருப்பை அல்லது சூற்பை அமைந்துள்ள விதம் கருவின் இதயத் துடிப்பைக் கண்டறிவதில் பங்குவகிக்கிறது. கிட்டத்தட்ட 20% பெண்களில் இது ஒரு மருத்துவ நிலையாகக் கருதப்படும். இந்த வழக்கில், கருப்பையானது வயிற்றுச் சுவரில் இருந்து சிறிது தொலைவில் இருக்கக் கூடும். காலம் செல்லச் செல்ல, கருப்பை விரிவடைந்து வயிற்றுச் சுவரை நோக்கி நகரும் என்பதால் இந்த நிலை குறித்து கவலைப்படவேண்டிய அவசியம் இல்லை. குழந்தையின் இதயமும் நன்கு வளர்ந்திருக்கும் மற்றும் கருப்பை விரிவடைந்தவுடன் இதயத்துடிப்பை அறியமுடியும்.
கர்ப்பத்தின் ஆரம்ப நாட்களில் கருவில் குழந்தை மிகச் சிறியதாக இருப்பதால் குழந்தை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கலாம். டாப்ளடின் உதவியோடு ஜூம் செய்து குழந்தையின் இதயத் துடிப்பைக் கண்டறிய முடியும். அதே சமயம் டாப்ளரின் உதவியுடன் இதயத் துடிப்பைக் கண்டறிய அதிக பொறுமையும் அதிர்ஷ்டமும் தேவை. எனவே, முதல் முயற்சியிலேயே இதயத் துடிப்பு கண்டறியப்படவில்லை எனில், மருத்துவரோடு ஆலோசித்து சிறிது காலம் கழித்து இச்சோதனையை மீண்டும் மேற்கொள்ளலாம்.
கருவில் இதயத் துடிப்பை அறியமுடியாததற்கான முக்கிய காரணங்களில் பனிக்குடத்தால் ஏற்படும் குறுக்கீடும் ஒன்றாகும், கருப்பையின் வெளிப்புறச் சுவரில் பனிக்குடம் வளர்ந்தால், டாப்ளரால் இரத்த ஓட்டத்தை அடையாளம் காண முடியும், ஆனால் இதயத் துடிப்பைக் கண்டறிய முடியாது. காலப்போக்கில், ஒலி அதிகரித்தாலும், குழந்தையின் மங்கலான இதயத் துடிப்பை டாப்ளர் மூலம் அறிய முடியாமல் போகலாம். ஆனால், காலம் செல்லச் செல்ல இதயத் துடிப்பு மேலும் அதிகரிக்கும்போது டாப்ளர் மூலம் எளிதாக அறியலாம். எனவே கவலை கொள்ளத் தேவையில்லை.
இதையும் படிக்கலாமே! - LMP மற்றும் அல்ட்ராசவுண்ட் நாட்களிடையே வித்தியாசம்
ஆரோக்கியமாக உள்ள தாய்மார்களின் உடலில் உள்ள கொழுப்பு அடுக்கு காரணமாக டாப்ளர் மூலம் கருவின் இதயத் துடிப்பை அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, இந்த விஷயத்தில், வயிற்றின் கீழ் பகுதியில் டிரான்ஸ்யூசரை வைத்து அல்ட்ராசவுண்ட் செய்து இதயத் துடிப்பைக் கண்டறியலாம். வயிற்று அல்ட்ராசவுண்ட் மூலம் இதயத் துடிப்பை அறிய முடியவில்லை என்றால், டிரான்ஸ்வஜினல் அல்ட்ராசவுண்ட் மேற்கொள்ளலாம்.
எனவே, 10 வாரமான பிறகும் இதயத் துடிப்பு இல்லை என்றால், குழந்தைக்கு ஏதேனும் ஆபத்தா எனக் கவலைப்படாமல் உங்கள் மருத்துவரை அணுகி அறிவுரை பெற்று சுகமான பிரசவத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்வது அறிவுறுத்தப்படுகிறது.
குழந்தையின் இதயதுடிப்பை எப்போது அறிய முடியும்? என்பது பற்றி மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள். பொதுவாக, கருவுற்ற ஏழு வாரங்களுக்குப் பிறகு தான் குழந்தையின் இதயத் துடிப்பைக் கண்டறிய முடியும் என்று கூறப்பட்டாலும், மேலே விளக்கப்பட்ட காரணங்களால் 9 வாரமான பிறகும் இதயத் துடிப்பை அறிய முடியாத நிலை ஏற்படலாம் மற்றும் இதனால் கருவுக்கு எக்குறையும் இல்லாமலும் இருக்கலாம். எனவே, பெற்றோர்கள் பீதி அடையாமல் தொடர்ந்து தங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று வெற்றிகரமான கருத்தரிப்பை மகிழ்வோடு கொண்டாடவேண்டும்.
Yes
No

Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips






கர்ப்பத்தின் போது தோல் அலர்ஜி(ப்ரூரிகோ): காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை(Prurigo of Pregnancy: Causes, Symptoms & Treatment In Tamil)

குழந்தைக்கு பயனுள்ள பொருட்களை வாங்குவது எப்படி?: உங்களுக்கான பட்டியல் இதோ!(How To Shop Sensibly For Your Baby: Here's A Checklist In Tamil)

பெண்களுக்கான எடை இழப்பு உணவு முறைகள்

சுகப்பிரசவம் அல்லது சிசேரியன் பிரசவம், இரண்டில் எது சிறந்தது | Which Is Better Normal Or Cesarean Delivery in Tamil

ஒவ்வொரு குளியலுக்குப் பிறகு உடல் லோஷனைப் பயன்படுத்துவதற்கான முதல் 10 காரணங்கள் (Top 10 Reasons to Apply a Body Lotion After Every Bath In Tamil)

அறிவுசார்ந்த குறைபாடு: அப்படியென்றால் என்ன, அதற்கான காரணங்கள் மற்றும் சிகிச்சை