

Pregnancy
3 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்ப காலத்தில் எப்போது தாய்ப்பால் சுரக்கு என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு குழந்தையின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு தாய்ப்பால் மிகவும் முக்கியமானது. தாய்ப்பாலானது ஃபார்முலாக்களை விட ஒரு குழந்தைக்கு ஜீரணிக்க எளிதானது, மேலும் இது ஒரு குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்களின் சரியான சமநிலையை வழங்குகிறது. இந்த வழிகாட்டி பிரக்னன்ஸியின் போது தாய்ப்பால் பொதுவாக எப்போது சுரக்க ஆரம்பிக்கிறது என்பதையும், உங்கள் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைப்பதை எவ்வாறு உறுதிப்படுத்தலாம் என்பதைப் பற்றியும் விவாதிக்கும்.
பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு பிரக்னன்ஸியின் 16 முதல் 22 வது வாரத்தில் தாய்ப்பால் உற்பத்தியாகிறது. இருப்பினும், சில பெண்களுக்கு 13 வது வாரத்திலேயே தாய்ப்பால் உற்பத்தி செய்யத் துவங்குகிறது. இந்த ஆரம்பகால பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது மற்றும் இதில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிபாடிகள் மிக அதிகமாக உள்ளன, இது புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. பிரசவத்தின் போது, பெரும்பாலான பெண்களின் மார்பகங்கள் முதிர்ந்த தாய்ப்பாலை உற்பத்தி செய்யும், இது சீம்பாலில் கிடைப்பதை விட குறைந்த செறிவிலான ஆன்டிபாடிகளைக் கொண்டிருக்கும், ஆனாலும் அவற்றில் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது.
சில பெண்களின் மார்பகங்களில் தாய்ப்பால் ஒருபோதும் உற்பத்தியாகாது அல்லது ஒரு சிறிய அளவை மட்டுமே உற்பத்தி செய்யலாம். நீரிழிவு நோய், தைராய்டு கோளாறுகள், சில மருந்துகள் மூலம் அல்லது போதுமான சுரப்பி திசுக்கள் இல்லாதது போன்ற மருத்துவ கண்டிஷன்கள் காரணமாக இது பெரும்பாலும் ஏற்படுகிறது. ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஏற்கனவே செய்யப்பட்டிருக்கும் மார்பக அறுவை சிகிச்சை மற்றும் உளவியல் காரணிகளும் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். தாய்ப்பால் உற்பத்தி செய்வதில் சிக்கல் இருந்தால், அது ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள் மற்றும் சிகிச்சை விருப்பங்கள் குறித்து உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்.
கர்ப்பத்தின் போது தாய்ப்பால் உற்பத்தி செய்யத் தொடங்வது என்பது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இது மூன்றாவது மாதத்தின் ஆரம்பத்தில் அல்லது கடைசி அல்லது ஒன்பதாவது மாதத்தின் பிற்பகுதியில் தொடங்கலாம். நீங்கள் இதற்கு முன்பு கர்ப்பமாக இல்லை என்றால், நான்காவது அல்லது ஐந்தாவது மாதம் வரை உங்கள் மார்பகங்களில் ஏற்படும் எந்த மாற்றங்களையும் நீங்கள் கவனித்திருக்க மாட்டீர்கள். அதற்குள், பெரும்பாலான பெண்களின் மார்பகங்கள் அளவு அதிகரித்து பால் உற்பத்தி செய்யத் தொடங்கிவிடுகின்றன.
இருப்பினும், சில பெண்கள் தங்கள் ஆறாவது மாதங்களுக்குப் பிறகும் கூட எந்த மாற்றங்களையும் அடைந்திருக்க மாட்டார்கள். உங்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி ஆகவில்லை என்று கவலை ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் அல்லது பேறுகால உதவியாளருடன் கலந்தாலோசியுங்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதையும், உங்கள் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தைப் பெறுவதையும் உறுதிப்படுத்த அவை உதவக்கூடும்.
பல காரணங்களுக்காக கர்ப்ப காலத்தில் எந்த வாரத்திலிருந்து உங்களுக்கு தாய்ப்பால் உற்பத்தி ஆகும் என்பதை அறிவது அவசியம் ஆகும்.
ஒன்று, உங்கள் குழந்தைக்கு எப்போது பம்ப் செய்வதன் முலமாக அல்லது கையால் அழுத்தி பாலை வெளிப்படுத்தத் தொடங்க வேண்டும் என்பதை நன்கு திட்டமிட இது உதவும். எந்த நேரத்தில் உங்கள் குழந்தைக்கு தேவைப்படுகிறதோ அந்த நேரத்தில் பாலூட்டலாம் என்பதைப் புரிந்துகொள்ளவும் இது உதவும்.
இது பொதுவாக மூன்றாவது அல்லது நான்காவது நாளில் பெண்களுக்கு தாய்ப்பால் "வருகிறது" அல்லது உற்பத்தி அதிகரிக்கும். தாய்ப்பால் உற்பத்தியில் இந்த அதிகரிப்பு "இரத்த நாளவீக்கம்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்த நேரத்தில், பெண்கள் தங்கள் மார்பகங்கள் முழுமையாகவும், கனமாகவும், சூடாகவும் இருப்பதை கவனிக்கலாம். பல பெண்களுக்கும் பசி அதிகரிக்கும் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறார்கள்.
இவை அனைத்தும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உங்கள் உடல் அதற்கேற்றவாறு சரிசெய்யும் என்பதற்கான சாதாரண அறிகுறிகள்.
உங்களுக்கு மார்பகத்தில் ஏதேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்ந்தீர்கள் என்றால், உங்கள் சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள். இரத்தநாள வீக்கம் மற்றும் வலியை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்த சிறந்த வழிகாட்டுதலை அவர்கள் வழங்குவார்கள்.
ஒரு தாய் தனது மார்பகங்களில் சிறிய அளவு திரவம் கசிவதை கவனிக்கும் பல நிகழ்வுகள் உள்ளன. பிரக்னன்ஸியின் போது ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு அதிகரிப்பதே இதற்குக் காரணம், இதன் காரணமாக பால் குழாய்கள் பாலால் நிரப்பப்படலாம். இருப்பினும், இது குழந்தை பிறந்த பிறகு "வருகிற" தாய்ப்பால் போன்றது அல்ல. தாய்ப்பால் வெளிவரும்போது, உங்கள் மார்பகங்களில் அதிக அளவு தாய்ப்பால் உற்பத்தி ஆவதை நீங்கள் கவனிப்பீர்கள்.
ஹார்மோன் அளவுகளில் ஏற்படும் மாற்றம் தாய்ப்பால் உற்பத்தியாகும் செயல்முறைக்கு வழிவகுக்கிறது. பிரசவத்திற்குப் பிறகு, ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவு கடுமையாக குறைகிறது. இது உடலுக்கு குழந்தைக்கு தேவையான பால் உற்பத்தியை தொடங்க சமிக்ஞை செய்கிறது. ஆக்ஸிடாசின் என்ற ஹார்மோனும் வெளியிடப்படுகிறது, இது மார்பகத்திலிருந்து தாய்ப்பாலை வெளியேற்ற உதவுகிறது (இது லெட்-டவுன் ரிஃப்ளெக்ஸ் என்று அழைக்கப்படுகிறது)
இதையும் படிக்கலாமே! - கர்ப்பமாக இருக்கும் போது முதுகு வலி ஏற்படக் காரணம்
மகப்பேறுக்கு பிறகான மூன்றாவது அல்லது நான்காவது நாளில், உங்களுக்கு தாய்ப்பால் "வருகிறது" அல்லது உற்பத்தி அதிகரிக்கிறது. இந்த அதிகரிப்பு "இரத்தநாள வீக்கம் " என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த நேரத்தில், உங்கள் மார்பகங்கள் முழுமையாகவும், கனமாகவும், சூடாகவும் இருப்பதை நீங்கள் கவனிக்கலாம். உங்களுக்கு பசி அதிகரிக்கலாம் மற்றும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை உணரலாம்.
இவை அனைத்தும் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பாலை உற்பத்தி செய்ய உங்கள் உடல் அதற்கேற்றவாறு சரிசெய்யும் என்பதற்கான சாதாரண அறிகுறிகள் ஆகும். பிரக்னன்ஸியின் போது தாய்ப்பால் எப்போது வருகிறது என்பதை அறிந்துகொள்வதன் மூலம் உங்கள் குழந்தைக்கு எப்போது பம்ப் செய்ய அல்லது கையால் அழுத்தி தாய்ப்பாலை வெளிப்படுத்தத் தொடங்க வேண்டும் என்பதை நன்கு திட்டமிட உதவும். நீங்கள் மார்பகங்களில் ஏதேனும் வலி அல்லது அசௌகரியத்தை உணர்ந்தால், உங்கள் சுகாதார வழங்குநரைத் தொடர்பு கொள்ளுங்கள்.
When do breast start producing milk during pregnancy in Tamil, When does Breast Milk come in during Pergnancy in Tamil, Leaking Milk during Pregnancy in Tamil, Which Month Breast Milk Start During Pregnancy in English, Which Month Breast Milk Start During Pregnancy in Bengali, Which Month Breast Milk Start During Pregnancy in Telugu

Mylo Biscuits for Pregnant Women - Sugar-free & High Protein - 250gm (50 Diskettes)
High Protein Pregnancy Biscuits | Supports Healthy Placenta | Supports Fetal Development | Easy To Digest
₹ 549

4.6
(97)


419 Users bought
Yes
No

Written by
Priya Baskar
Get baby's diet chart, and growth tips






கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வாயு மற்றும் வயிறு உப்பசத்தை எப்படி கையாள்வது ? (Dealing with Gas & Bloating during pregnancy In Tamil)

பிரசவத்திற்குப் பிறகான ப்ரீக்லாம்ப்சியா_ காரணங்கள், சிகிச்சைகள், நிவாரணத்திற்கான குறிப்புகள்.

ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கா? அப்படியென்றால் என்ன, எப்போது உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்? (Bleeding During Pregnancy? What Does It Mean & Should You Consult A Doctor In Tamil)

கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை(Pain in Groin During Pregnancy: Causes, Symptoms, and Treatment In Tamil)

When Will My Menstrual Cycle Resume After Pregnancy in Tamil |கர்ப்பத்திற்குப் பிறகு எனது மாதவிடாய் சுழற்சி எப்போது மீண்டும் தொடங்கும் ?