

Pregnancy
18 December 2025 அன்று புதுப்பிக்கப்பட்டது
இரத்த சோகை என்பது மிகக் குறைவான இரத்த சிவப்பணுக்கள் இருக்கும் நிலையைக் குறிக்கிறது. இரத்த சிவப்பணுக்கள் நாம் உயிர்வாழ்வதற்கு இன்றியமையாதவையாகும். இரத்த சிவப்பணுக்கள் மூலம் தான் ஆக்ஸிஜன் திசுக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இரத்த சோகை காரணமாக இரத்த சிவப்பணுக்கள் குறைவாக இருப்பது சோர்வு, மூச்சுத் திணறல் மற்றும் வெளிர் நிறம் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது பல்வேறு நோய்கள், உணவுக் குறைபாடுகள் மற்றும் மரபணு கோளாறுகளால் கூட ஏற்படலாம். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இரத்த சோகை சோர்வு, மோசமான இரத்த ஓட்டம் மற்றும் மரணம் உள்ளிட்ட கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
இந்த வலைப்பதிவில், வாசகர்கள் இரத்த சோகையின் அனைத்து அறிகுறிகளையும் சிறப்பாகச் சமாளிப்பதில் இருந்து ஆரோக்கியமான இரத்தத்தைப் பராமரிப்பது வரை, இரத்த சோகையைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் உங்களுக்காக கொடுத்துள்ளோம். அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குவது இரத்த சோகையை அபாயகரமானதாக மாற்றுவதைத் தடுப்பதற்கான திறவுகோலாகும்.
இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை, இது மிகவும் பொதுவான வகை இரத்த சோகையாகும். சரியாகச் செயல்பட உடலில் போதுமான இரும்புச்சத்து இல்லாதபோது இது ஏற்படுகிறது. உணவில் இரும்புச்சத்து குறைபாடு இருந்தால் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகை ஏற்பட்டு இரத்தத்திலும் இரும்புச்சத்து குறைவாகக் காணப்படும். அதனால் அது உறிஞ்சுதல் பிரச்சனைகள் அல்லது குடல் அல்லது கல்லீரலை சேதப்படுத்தும் நோய் உள்ளிட்ட நிலைமைகளை ஏற்படுத்தும்.
வைட்டமின் பி12 குறைபாடு இரத்த சோகை என்பது உடலில் போதுமான வைட்டமின் பி12 இல்லாதபோது ஏற்படும் ஒரு அரிய வகை இரத்த சோகை ஆகும். சராசரி இரத்த சிவப்பணு உற்பத்தி மற்றும் வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க வைட்டமின் பி12 இன்றியமையாதது. உடலானது போதுமான அளவு வைட்டமின் பி12-ஐ உறிஞ்சுவதைத் தடுக்கும் வகையில் வயிறு அல்லது குடலில் ஏற்படும் பிரச்சனைகள் அல்லது குடலை சேதப்படுத்தும் புற்றுநோய் சிகிச்சைகள் போன்றவை மூலமாக இது ஏற்படலாம்.
சிவப்பு இரத்த அணுக்கள் (ஆர்பிசி) டிஸ்ஜெனீசிஸ் என்பது இரத்த சிவப்பணுக்களை பாதிக்கும் ஒரு வகை இரத்த சோகை ஆகும். டிஸ்ஜெனீசிஸ் என்பது இரத்த சிவப்பணுக்களின் (ஆர்பிசி) இயல்பான செயல்பாட்டிற்கு மிகவும் அதிகமான எண்ணிக்கையில் அசாதாரண செல்கள் உற்பத்தி செய்யப்படுவதாகும்.
அரிவாள் செல் இரத்த சோகை (சிக்கில் நோய்) மரபுவழி தோன்றுவது, பெரும்பாலும் ஆபத்தானது. குறைபாடுள்ள ஹீமோகுளோபினால் ஏற்படும், அரிவாள் செல் அனீமியா வட்டமான மற்றும் நெகிழ்வான இரத்த சிவப்பணுக்களை பிறை (அரிவாள்) வடிவமாக மாற்றுகிறது, இது இரத்தக் கட்டிகளுக்கு வழிவகுக்கிறது.
எய்ட்ஸ், புற்றுநோய், முடக்கு வாதம், கிரோன் நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற சில நோய்களின் விளைவாக எழும் தடிப்புகள் காரணமாக அழற்சியினால் விளையும் இரத்த சோகை ஏற்படுகிறது.
ஹீமோலிடிக் அனீமியா மரபுவழியாக வரலாம் அல்லது தானாகவும் உருவாகலாம். இந்த நிலையில், எலும்பு மஜ்ஜையால் புதிய இரத்த அணுக்களை அவை அழிக்கப்படுவதை விட வேகமாக உருவாக்க முடியாது. இது பொதுவாக பலவிதமான இரத்தம் சார்ந்த நோய்களால் ஏற்படுகிறது.
எலும்பு மஜ்ஜை நோய்களால் ஏற்படும் இரத்த சோகை, மைலோஃபைப்ரோஸிஸ் மற்றும் லுக்கீமியா போன்ற நிலைகளால் ஏற்படலாம். இந்த நிலைமைகள் எலும்பு மஜ்ஜையில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை பாதிக்கிறது, இது இரத்த சோகைக்கு வழிவகுக்கிறது.
ஃபோலேட் குறைபாடு இரத்த சோகை, பெயர் குறிப்பிடுவது போலவே ஃபோலிக் அமிலத்தின் குறைபாடு காரணமாக இது ஏற்படுகிறது. இது மற்ற வகையான இரத்த சோகையைப் போல சிக்கலானது அல்ல, மேலும் ஃபோலிக் அமில மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் மூலமோ அல்லது ப்ரோக்கோலி மற்றும் பிரஸ்ஸல் ஸ்ப்ரெளட்ஸ் (கிளைக்கோசு) போன்ற ஃபோலிக் நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலமோ குணப்படுத்த முடியும்.
இரத்த சோகையின் அறிகுறிகளையும் அடையாளங்களையும் புரிந்துகொள்வது அதைச் சமாளிப்பதற்கான முதல் படியாகும். ஒரு நபர் இரத்த சோகையின் கடுமையான அறிகுறிகளை அடையாளம் காணத் தவறினால், இறுதியில் மருத்துவ உதவியை நாடவில்லை என்றாலும், அவர் நிலைமையை மோசமாக்கும். அதோடு அவரின் ஆரோக்கியத்தை சமரசம் செய்யும் அபாயம் வந்துவிடும். இரத்த சோகையின் சில பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
தலைச்சுற்றல்
பலவீனம்
பார்வை இழப்பு
மங்கலான பார்வை
எளிதில் சோர்வடைதல்
வெளிர் சருமம்
வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது அல்லது அறுவை சிகிச்சை அல்லது நோயின் காரணமாக குறைந்த இரத்த எண்ணிக்கை இருப்பது உள்ளிட்ட பல காரணங்களால் இரத்த சோகை ஏற்படலாம். யாரேனும் தங்கள் இரும்பு சத்து அளவுகள் பற்றி கவலைப்படுகிறார்கள் மற்றும் மேலே பட்டியலிடப்பட்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தால், மருத்துவரை ஆலோசிப்பது கட்டாயமாகும். மருத்துவர் இரும்புச் சத்து அளவை மேம்படுத்த மற்றும் இரத்த சோகை ஏற்படும் அபாயத்தை குறைக்கும் வழிகளை பரிந்துரைப்பார்.
பல்வேறு காரணங்களால் இரத்த சோகை ஏற்படலாம்:
இரும்புச்சத்து குறைபாடு
உடலில் தாமிரம் (காப்பர்) இல்லாது இருத்தல்
எலும்பு மஜ்ஜையை பாதிக்கும் கட்டி அல்லது தொற்று
தலசீமியா எனப்படும் இரத்தக் கோளாறு
இரத்த சோகைக்கு வேறு பல காரணங்கள் இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
இரத்த சிவப்பணுக்கள் மனித உடலின் உயிர்நாடியாகும். அவை உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்ஸிஜனை எடுத்துச் சென்று ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றன. சிவப்பு இரத்த அணுக்கள் எலும்பு மஜ்ஜையில் உருவாக்கப்படுகின்றன. மேலும், அவை உடல் முழுவதும் எடுத்துச்செல்லப்படுவதற்கு முன்பு கல்லீரலில் சேமிக்கப்படுகின்றன. இரத்த சோகையை (அனீமியா) புரிந்துகொள்வதைப் போலவே இரத்த அணுக்களின் பங்கைப் புரிந்துகொள்வதும் அவசியம்.
இரத்த சோகையை தடுக்க சமச்சீர் உணவு, போதுமான உடற்பயிற்சி, அதிகப்படியான மது அருந்துவதை தவிர்த்தல் உள்ளிட்ட பல வழிகள் உள்ளன. ஒருவர் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம், இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உள்ளடக்கிய சீரான உணவை உண்பதுதான். இரும்புச்சத்துக்கான மிகவும் பொதுவான ஆதாரங்கள் இறைச்சி, கோழி மற்றும் முட்டை. மற்ற உணவுகளில் தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற வலுவூட்டப்பட்ட உணவுகள் அடங்கும். இரும்புச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதோடு, இரும்புச் சத்தை அதிகரிக்க சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு நபருக்கு அடிக்கடி இரத்தப்போக்கு ஏற்பட்டால், மருத்துவர் அவர்களுக்கு இரத்த மாற்றம் செய்ய பரிந்துரைக்கலாம்.
இதையும் படிக்கலாமே! - பிரசவத்திற்குப் பிறகான ப்ரீக்லாம்ப்சியா_ காரணங்கள், சிகிச்சைகள், நிவாரணத்திற்கான குறிப்புகள்.
இரத்தச் சோகை (அனீமியா) என்பது உடலில் போதுமான இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யமுடியாத போது ஏற்படுகிறது. இதன் விளைவாக, ஒருவர் சோர்வு, லேசான தலைவலி மற்றும் மோசமான பலவீனத்தை அனுபவிக்கலாம். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இரத்த சோகை இதய நோய், பக்கவாதம் மற்றும் மரணம் போன்ற உடல்நல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இரத்த சோகைக்கான சிகிச்சையானது நோயாளியின் கண்டறியப்பட்ட வகை மற்றும் பிற அடிப்படை நிலைமைகளைப் பொறுத்து அமைகிறது. தீவிர மாதவிடாய் மற்றும் கர்ப்பத்தால் ஏற்படும் இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும் என்பதால் இரத்த சோகை (அனீமியா) உள்ள பெண்கள் இரும்புச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும்.
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips











10-வார கர்ப்ப வயிறு எப்படி இருக்கும்?

கவனமாக இருக்க வேண்டிய தருணம்: பொய் வலிக்கான 3 அறிகுறிகள் (Be aware: 3 signs of false labour In Tamil)

கர்ப்ப காலத்தில் தயிர்: தொடர்புடைய நன்மைகள், பக்கவிளைவுகள் & தற்காப்பு | Curd During Pregnancy: Benefits, Side Effects & Precautions In Tamil

கர்ப்பக்காலத்தில் உங்கள் மன ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி?

கர்ப்பமான 8 வாரங்களில் வயிறு வெளியே தெரியுமா?

உங்கள் குழந்தையை ஈரம் மற்றும் தடிப்புகள் இல்லாமல் வைத்திருப்பதில் துணி டயப்பர்(cloth diapers) எவ்வளவு உதவிகரமானதாக இருக்கும்?