
பொதுவாக புதிய தாய்மார்கள் கர்ப்பம் மற்றும் குழந்தைபிறப்பு சார்ந்த சவால்களுடன் போராடுவதால், குழந்தை பிறப்பிற்குப் பிறகு பல விஷயங்கள் தவறாகப் போவது ஒன்றும் அசாதாரணமானது அல்ல. சில சிக்கல்கள் அபாயகரமாக இருக்காது. அவற்றை வீட்டிலேயே கவனித்துக் கொள்ளலாம். சிலவற்றிற்கு அவசர மருத்துவ தலையீடு தேவைப்படலாம். இத்தகைய சிக்கல்களை கையாள்வதற்காக அவற்றைப் பற்றி அறிந்திருப்பது அவசியமாகும். எனவே, இந்த காட்டுரையானது புதிய தாய்மார்கள் கர்ப்ப காலத்திற்குப் பிறகு எதிர்கொள்ளக்கூடிய கர்ப்ப காலத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்களை உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.
கர்ப்ப காலத்திற்குப் பிறகான இரத்தப்போக்கு, கருப்பை தசைச்செயலிழப்பு காரணமாக ஏற்படுகிறது, இது பொதுவாக ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் ஒரு நிலையாகும். இத்தகைய நிலையில் இரத்தப்போக்கை நிறுத்த கருப்பையால் சரியாக சுருங்க முடியாது. இதன் காரணமாக கர்ப்ப காலத்திற்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கு அதிகமாகி, பெண் தன் உடலுக்குத் தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்வது தடைப்பட்டுவிடும். இந்த வகை இரத்தப்போக்கு இரத்த சோகைக்கும் கூட வழிவகுக்கலாம், இந்த நிலையில் உடலில் இரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு இருக்காது. இரத்த சோகை ஒரு பெண்ணை சோர்வாகவும் பலவீனமாகவும் உணரக்கூடும், மேலும் இதனால் அவர் தனது தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிரமத்தை எதிர்கொள்ளலாம். இரத்த சோகைக்கு சரியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது மற்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
செப்சிஸ் என்பது சிசேரியன் அல்லது நார்மல் டெலிவரிக்குப் பிறகு ஏற்படக்கூடிய ஒரு சிக்கலாகும். பிறப்புப் பாதை மற்றும் இரத்த ஓட்டத்தில் பாக்டீரியா இருப்பதால் இது ஏற்படுகிறது, இது முழு உடலையும் அழற்சி நிலைக்கு தள்ளிவிடுகிறது. நோய்த்தொற்றை எதிர்த்துப் போராட உடல் ரசாயனங்களை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது, ஆனால் இந்த இரசாயனங்கள் சில நேரங்களில் உடலின் திசுக்களைக் கொல்லும். இது இரத்த அழுத்தம் குறைவதற்கும், இரத்த நாளங்கள் உடலில் திரவத்தை கசியச் செய்வதற்கும் காரணமாக இருக்கலாம். இது பெரிபார்ட்டம் காலத்தில் ஏற்படக்கூடிய உயிருக்கு ஆபத்தான சிக்கல்களில் ஒன்றாகும். செப்சிஸ் காரணமாக ஏற்படக்கூடிய இறப்புகளின் விகிதம் அதிகமாக உள்ளது.
கர்ப்ப காலத்திற்குப் பிறகான மனச்சோர்வு என்பது குழந்தை பிறந்த பிறகு ஏற்படக்கூடிய ஒரு வகையான மனச்சோர்வு ஆகும். இது கர்ப்ப காலத்திற்குப் பிறகு 5% முதல் 20% பெண்களை பாதிக்கிறது. கர்ப்ப காலத்திற்குப் பிறகான மனச்சோர்வு வயது, இனம், வருமானம், கல்வி, கலாச்சாரம் அல்லது திருமண நிலை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பெண்ணையும் பாதிக்கலாம். கர்ப்ப காலத்திற்குப் பிறகான மனச்சோர்வு மற்றும் பதட்டம் ஆகியவை கர்ப்ப காலத்திற்குப் பின் ஏற்படும் மனநிலைக் கோளாறுகளாகும். இந்த சந்தர்ப்பங்களில், ஒரு பெண் தீவிர சோகம், நம்பிக்கையின்மை, எரிச்சல் மற்றும் மாறிக் கொண்டே இருத்தல் போன்றவை காணப்படலாம். அதோடு தனது பார்ட்னர் மீது அக்கறை குறைவாக இருப்பது போன்று உணரலாம். மேலும், குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் ஆசையையும் அது தூண்டக் கூடும். இத்தகைய கர்ப்ப காலத்திற்குப் பிறகான மனநிலை கோளாறுகள் எதார்த்தமாக மற்றும் பொதுவாக இருக்கக் கூடியவையே ஆகும்.
இதையும் படிக்கலாமே! - பிறந்த குழந்தைக்கு மசாஜ் செய்வதற்கான சரியான நேரம் எது?
பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் இடையூறு காரணமாக மூளையின் செயல்பாட்டின் திடீர் செயலிழப்பு ஆகும். கர்ப்பிணிப் பெண்களில், பக்கவாதம் என்பது கர்ப்ப காலத்திற்குப் பின் ஏற்படும் ஒரு சிக்கலாகும். கர்ப்ப காலத்தில் அல்லது கர்ப்பத்திற்குப் பிந்தைய காலத்தில் பக்கவாதம் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் இதய நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த உறைவு ஆகியவை அடங்கும். கட்டிகள் பொதுவாக பிரக்னன்ஸியுடன் தொடர்புடையவை, ஆனால் கர்ப்ப காலத்திற்குப் பிறகும் ஏற்படலாம். கர்ப்ப காலத்திற்குப் பிறகு பல வாரங்களுக்கு பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.
கார்டியோமயோபதி பிரக்னன்ஸியின் சாத்தியமான சிக்கல்களில் ஒன்றாகும். இது தாயின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் வளரும் குழந்தையின் ஆக்ஸிஜன் தேவை ஆகியவற்றால் தூண்டப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட மருந்துகள் அல்லது நோய்த்தொற்றுகளும் ஒரு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம். இந்த நிலை ஒப்பீட்டளவில் பொதுவானது மற்றும் பெண்களுக்கு இதய நோய்க்கான முதல் காரணமாகும். இந்த நோயினால் இதயம் விறைப்பு மற்றும் தசை தடிமனாகிறது, இதனால் இதயம் உடல் முழுவதும் இரத்தத்தை பம்ப் செய்வதை கடினமாக்குகிறது. இது இதய செயலிழப்புக்கு வழிவகுக்கும் மற்றும் மரணத்தை கூட ஏற்படுத்தும்.
நுரையீரல் தக்கையடைப்பு இரத்தக் கட்டிகளை உருவாக்குவதால் ஏற்படுகிறது, பொதுவாக கால்களிலிருந்து நுரையீரலுக்குச் செல்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் அல்லது படுத்த படுக்கையாக இருப்பவர்கள் ஆகியோருக்கு கால்களின் ஆழமான நரம்புகளில் இரத்தக் கட்டிகள் உருவாகலாம். ஒருவர் படுத்திருந்த நிலையில் இருந்து மிக விரைவாக எழுந்தால், கால்களின் நரம்புகளில் இரத்தம் தேங்கி, தேங்கிய இரத்தத்தில் சிறு கட்டிகள் உருவாகலாம். இந்த கட்டிகள் பொதுவாக உடலின் இயற்கையான பொறிமுறையால் கரைக்கப்படுகின்றன, ஆனால் ஒரு உறைவு உடைந்தால், அது நுரையீரலுக்குச் சென்று நுரையீரலுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது மற்றும் மிகவும் ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. நுரையீரலில் இரத்தம் உறைதல் என்பது கர்ப்ப காலத்திற்குப் பிறகான ஒரு சிக்கலாகும், மேலும் குழந்தை பிறந்த முப்பது நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இது ஏற்படலாம்.
இறுதியாக, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் இதய நோய்கள் போன்ற சில முன்கூட்டிய மருத்துவ நிலைமைகள் உள்ளன, இவை இல்லாதவர்களை விட புதிய தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்களை உருவாக்கும் அபாயம் அதிகம்.
சுருக்கமாக, கர்ப்ப காலத்திற்குப் பின் ஏற்படும் சிக்கல்கள் தாய்க்கும் குழந்தைக்கும் பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். பொதுவான சிக்கல்களைப் பற்றி முன்பே புரிந்து கொள்வது உங்களால் இவற்றை சமாளிக்க உதவியாக இருக்கும்.
postpartum in tamil, postpartum complications in tamil, normal delivery in tamil, cesarean delivery in tamil, c-sec delivery in tamil, depression after delivery in tamil, postpartum delivery in tamil
Yes
No

















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |