
ஒரு தொற்றால் சளி, இருமல் ஏற்படுகிறது. இது வைரஸ் என அழைக்கப்படுகிறது. அவை தாமாகவே அழிக்கப்படுகின்றன. மேலும் இதற்கு நோய் எதிர்ப்பு மருந்துகளால் பயன் எதுவும் இல்லை. சில அறிகுறிகளை வேண்டுமானால் பாராசிட்டமால் அல்லது ஐபியூப்ரூஃபென் சரி செய்யும். குழந்தை தேவையான அளவு தாய்ப்பால் குடிப்பதையும் உறுதி செய்யுங்கள்.
பெரும்பாலான இருமல் மற்றும் சளி வைரஸ்கள் எனப்படும் கிருமிகளால் ஏற்படுகிறது. பல்வேறு வைரஸ்கள் மூக்கு மற்றும் தொண்டையை பாதிக்கக் கூடும். இருமல் மற்றும் தும்மல் மூலம் வைரஸ் காற்றில் பரவுகிறது. ப்ரீ ஸ்கூல் மற்றும் ஆரம்பப் பள்ளி குழந்தைகளுக்கு ஆண்டில் 3 முதல் 8 முறை இருமல் அல்லது சளி ஏற்படுகிறது. சில குழந்தைகளுக்கு இதை விட அதிகமாக இருக்கும். சில நேரங்களில் இருமல் அல்லது சளி ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும். புகைபிடிக்கும் நபருடன் குழந்தை இருந்தால் இருமல் மற்றும் ஜலதோஷம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அவர்களுக்கு ஏற்படும் சளி நீண்ட காலத்திற்கு நீடிக்கும்.
குழந்தைகளுக்கு ஏற்படும் சளி மற்றும் இருமலின் அறிகுறிகள் இங்கே:
1. வழக்கமான அறிகுறிகளில் இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஆகியவை அடங்கும். பெரும்பாலும் இரவுகளில், இருமல் மோசமாக இருக்கும். இருமலினால் நுரையீரல் பாதிக்கப்படாது.
2. குழந்தை உணவை ஏற்றுக் கொள்ளாமல் அடம்பிடிக்கும். தொண்டை புண், தலைவலி மற்றும் அதிக உடல் வெப்பநிலை (காய்ச்சல்) ஆகியவற்றின் அறிகுறியாகக் கூட இது இருக்கும். இருமலுக்குப் பிறகு குழந்தைகளுக்கு உடம்பு (வாந்தி எடுப்பதால்) முடியாமல் போகலாம்.
3. செவிப்பறைகளுக்குப் பின்னால் சளி சேர்வதால் லேசான காது வலி அல்லது கேட்கும் திறன் குறைய வாய்ப்புள்ளது.
4. நோய்வாய்ப்பட்டால், குழந்தைகள் அடிக்கடி நிறைய நேரம் தூங்குவார்கள்.
ஒரு குழந்தை தனது நாசி சிறியதாக இருப்பதால் அதன் வழியாக சுவாசிக்க சிரமப்படும்போது, மூக்கு அடைப்பைப் போக்க பல்ப் சிரஞ்சி பயன்படுத்தப்படுகிறது. மூக்கடைப்பு காரணமாக உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டால் கூட பாட்டில் பாலை கொடுக்கலாம். உங்கள் குழந்தை வழக்கமாக பால் குடிக்க முயற்சிக்கும் நேரத்திற்கு 15 நிமிடங்கள் முன்னதாகவே இதை முயற்சி செய்யுங்கள்.
உங்கள் குழந்தை விரும்பவில்லை என்றால், பல்ப் சிரிஞ்சியைப் பயன்படுத்த வேண்டாம். இருப்பினும், பிறந்த குழந்தைகளுக்கு இது சிறந்ததாக இருக்கும்.
மெடிக்கலில் நீங்கள் ஒரு பல்ப் சிரஞ்ச் மற்றும் ஸ்டெரில் சலைன் நாசி ஸ்பிரேவையும் வாங்கலாம். உப்பு நீரைக்கூட வீட்டில் தயாரிக்கலாம். ஒரு கப் கொதித்து, ஆற வைத்த தண்ணீரில் அரை டீஸ்பூன் உப்பு கரைந்திருக்க வேண்டும். தினமும் இதை புதிதாகத் தயாரித்து, கிருமிகள் தொற்றாமல் இருக்க சுத்தமான மூடியுடன் கூடிய ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்து வையுங்கள்.
உங்கள் குழந்தையின் நாசியில் இரண்டு அல்லது மூன்று துளிகள் உப்புக் கரைசலை பல்ப் சிரிஞ்சி மூலம் பிழிந்து மூக்கடைப்பை சரி செய்யலாம். இதைச் செய்யும்போது உங்கள் குழந்தையின் தலையை பின்னால் சாய்க்கவும். சுமார் பத்து வினாடிகளுக்குப் பிறகு, குழந்தையின் தலையை அசையாமல் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.
உப்புநீரை டிராப்களா போட்ட பிறகு சளி கரைந்துவிடும். அதன்பிறகு, சளியை உறிஞ்சுவதற்கு பல்ப் சிரிஞ்சியைப் பயன்படுத்துங்கள். உங்கள் குழந்தையின் நாசியில் நுனியை கவனமாகச் செருகிய பிறகு, சிரஞ்சியை அழுத்துங்கள். சளியை சேகரிக்க, மெதுவாக பல்ப் பகுதியை ரிலீஸ் பண்ணுங்க. சிரஞ்சியை மற்றொரு நாசியில் செருகுவதற்கு முன் பல்பிலிருந்து சளியை நீக்கிவிட வேண்டும். மற்றொரு நாசியில் அந்த சிரஞ்சியைப் பயன்படுத்தப்படுவதற்கு முன், அதை வெதுவெதுப்பான, சுடு நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
சிரஞ்சியைப் பயன்படுத்தும் போது உங்கள் குழந்தை அழுதால் உப்பு டிராப்களைப் பயன்படுத்துங்கள். பின்னர் ஒரு பருத்தி துணியால் அல்லது நாப்கினைப் பயன்படுத்தி குழந்தை நாசியின் கீழ் பகுதியை மெதுவாக துடைத்து விடுங்கள். ஒரு டிராப் பேபி ஆயில் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை பருத்தி துணியில் அல்லது மென்மையான மஸ்லின் துணியில் விட்டுக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் மூக்கின் வெளிப்புறத்தில் சளி காய்ந்து போயிருந்தால், பெட்ரோலியம் ஜெல்லி அல்லது பேபி ஆயிலைக் கொண்டு மெதுவாக துடைத்து சுத்தம் செய்யுங்க. எண்ணெய், கிரீம் அல்லது பிற நாசி டிராப்களை விடுவதற்கு முன் உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குழந்தைக்கு தேன் கொடுப்பது தொண்டையில் உள்ள தொற்றுகளை நீக்கும் மற்றும் இருமலைப் போக்கும். ஆதாரங்களின்படி, இருமலைப் போக்குவதில் தேன் பயனுள்ளதாக இருக்கும் மற்றும் குழந்தைகள் இரவில் நன்றாக தூங்குவார்கள். இந்த சிகிச்சையை முயற்சிக்க, உங்கள் குழந்தைக்கு குறைந்தது ஒரு வயது ஆகி இருக்க வேண்டும்.
சில நபர்கள் தேனில் எலுமிச்சை மற்றும் சூடான நீரை சேர்ப்பார்கள். இது இனிமையான தேனுடன் கூடுதலாக ஒரு சிறிய அளவு வைட்டமின் சியை வழங்குகிறது. ஜலதோஷத்திற்கு (குறிப்பாக தொண்டைக்கட்டி இருத்தல்) மற்றொரு நன்கு விரும்பப்படும் பாரம்பரிய சிகிச்சை முறை என்னவென்றால், தேனை சிறிது இஞ்சி சாறு மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகுடன் இணைப்பது ஆகும்.
தேன் ஒரு வகை சர்க்கரை என்பதால், அது உங்கள் குழந்தையின் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். குறிப்பாக இரவு நேரத்தில் உங்கள் குழந்தைக்கு தேனைக் கொடுத்தால், அதை சாப்பிட்ட பிறகு குழந்தையின் பற்களை சுத்தம் செய்ய வேண்டும்.
உங்கள் நாட்டில் உள்ள காலநிலையைப் பொறுத்து அறை வெப்பநிலையில் தேன் கெட்டியாகக் கூடும். ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரைக் கொதிக்க வைத்து, மென்மையாக்க ஆறவிடவும். ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை கொதிக்கும் நீர் நிரப்பப்பட்ட பாத்திரத்தில் தேன் ஜாடியை வைக்கவும். அது உருகும்போது, தேன் விரும்பிய நிலைத்தன்மையை அடையும்.
ஆய்வுகளின்படி, சூடான பானங்கள், உடலை அமைதிப்படுத்துகிறது மற்றும் காய்ச்சல், வலிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட சளி அறிகுறிகளைக் குறைக்கிறது. பொதுவாக ஜலதோஷத்தால் ஏற்படும் நீரிழப்பை நிறைய தண்ணீர் குடிப்பதன் மூலம் தவிர்க்க முடியும். இதன்மூலம் உங்கள் குழந்தைகளின் மூக்கில் சளியும் சுத்தப்படுத்தப்படும்.
பொதுவாக சூப்கள், கடலை மாவு கீர், பருப்பு சூப் மற்றும் துளசி மற்றும் இஞ்சி தேநீர் (துளசி மற்றும் இஞ்சி டீ) போன்ற சூடான திரவங்களை குழந்தைகளுக்கு வழங்க தாய்மார்கள் விரும்புகிறார்கள்.
குறிப்பாக கோடையில், பல தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு குளிர்பானங்களை கொடுப்பது நன்மை பயக்கும் மற்றும் இனிமையானது என்பதை கண்டறிந்துள்ளனர். எலுமிச்சைச் சாறு, பழ ஸ்மூத்திகள், லஸ்ஸி, வீட்டில் இருந்து புதிதாக பிழிந்த சாறுகள் மற்றும் சாறு சார்ந்த ஐஸ் லாலிபாப்கள் ஆகியவற்றை நீங்கள் கொடுக்கலாம்.
உங்கள் குழந்தை தூங்கும் போது தலை நிமிர்ந்து இருந்தால் சுவாசம் மிகவும் சீராக இருக்கும். குழந்தையின் மெத்தைக்கு முட்டுக்கட்டை போட நீங்கள் தலையணைகள் அல்லது துணிகளைப் பயன்படுத்தலாம்.
உங்கள் குழந்தையின் மெத்தைக்கும் தொட்டிலுக்கும் இடையில் சில துண்டுகள் அல்லது ஒரு சிறிய தலையணையை வைக்கவும். செங்கற்கள் அல்லது பலகைகளால் படுக்கை அல்லது கட்டிலின் கால்களை உயர்த்த முயற்சிப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவ்வாறு செய்வது கட்டிலை சாய்த்துவிடக்கூடும்.
உங்கள் குழந்தை பெரிய பெட்டில் படுத்துத் தூங்கினால், தலைக்கு பின்னால் இரண்டாவது தலையணை வைப்பது கூடுதல் பாதுகாப்பானதாக அமையும். ஆனால் குழந்தை தூங்கும் போது மெத்தையை தூக்கி எறிந்து புரட்டினால் தலை பகுதி மெத்தையை அதிகரிப்பது நல்லது. குழந்தையின் தலைக்குக் கீழே கூடுதல் மெத்தைகளை வைப்பதற்குப் பதிலாக இதைச் செய்வதன் மூலம் மிகவும் வசதியான சாய்வு நிலை உருவாக்கப்படுகிறது.
ஈரமான காற்றை சுவாசிக்க வைப்பதன் மூலம் குழந்தையின் மூக்கில் உள்ள சளியை தளர்த்த முடியும். உங்கள் குழந்தை சூடான குளியல் மூலம் ஓய்வெடுக்கும்.
காற்றில் ஈரப்பதத்தைச் சேர்க்க கூலான ஈரப்பதமூட்டியை நீங்கள் வாங்கலாம். ஸ்டீமரையும் நீங்கள் வாங்கலாம். சில இடங்களில் ஈரப்பதமூட்டிகளை நீங்கள் தேடினாலும் கடைகளில் கிடைக்காது. நீங்கள் அதை ஆன்லைனில் அல்லது ஒரு சிறப்பு விற்பனையாளரிடமிருந்து வாங்க வேண்டும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் குழந்தை ஓய்வெடுக்கும் இடம் அல்லது விளையாடும் இடத்தில் நீராவி, ஈரப்பதமூட்டி அல்லது ஸ்டீமரை இயக்க வேண்டும். காற்று அதிக ஈரப்பதமாக இருக்கும்போது உங்கள் குழந்தை எளிதாக சுவாசிக்கும்.
நீங்கள் ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தினால், உற்பத்தியாளர் கூறியபடி, அதை அடிக்கடி (ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை) சுத்தம் செய்யுங்கள். குறிப்பாக சுத்தமாக வைக்கப்படாவிட்டால், ஈரப்பதமூட்டிகள் அழுக்குகளை சேகரித்து வைக்கும், அவை காற்றில் வெளியிடப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஸ்டீமர்கள் கடைகளிலும் ஆன்லைனிலும் ஒவ்வொரு விலை ரேஞ்சில் கிடைக்கிறது. இது ஃபேசியல் ஸ்டீமர்களுடன் கூட வேலை செய்கிறது.
உங்களிடம் இவை எதுவும் இல்லை என்றால், குளியலறையில் உள்ள நீராவி காற்றை உங்கள் குழந்தை சுவாசிக்க அனுமதிப்பது ஒரு தற்காலிக தீர்வாக வேலை செய்யும். சூடான தண்ணீர் குழாயைத் திறந்து, குளியலறையின் கதவை மூடவும். உங்கள் குழந்தையுடன் சூடான அறையில் 15 நிமிடங்கள் செலவு செய்தால் போதும். இந்த சமயத்தில் ஒரு பழைய துண்டு கொண்டு கதவின் கீழ் புறம் ஒரு திறப்பை ஏற்படுத்தி வைத்திருங்கள். உங்கள் இருவருக்கும் மிகவும் சுவாரஸ்யமாக இருக்க, சில பொம்மைகள் அல்லது நீர்ப்புகா புத்தகங்களை வைத்துக் கொள்ளுங்கள்.
கூடுதலாக, ஈரப்பதமான குளியலறையில் உங்கள் குழந்தையை சுடு தண்ணீரில் குளிப்பாட்டலாம். குழந்தை கொஞ்சம் வளரத் தொடங்கிவிட்டால், நீங்கள் குழந்தையை அதன் இஷ்டத்திற்கு குளிக்க விட்டுவிட்டு வேடிக்கையை மட்டும் பார்க்கலாம். நீராவிக்கு நன்றி சொல்லுங்கள். குழந்தை எளிதாக சுவாசிக்க முடியும்.
இருமல் மற்றும் சளி அறிகுறிகளைப் போக்க வேபர் மசாஜைப் பயன்படுத்துங்கள். இதுபோன்று செய்தால் குழந்தைகள் பெரும்பாலும் இரவில் நன்றாக தூங்க முடியும். அவற்றின் இரசாயனங்கள் மூக்கு அடைப்பை எடுக்க உதவாது. ஆனால் குளிரால் பாதிக்கப்பட்டவர்கள் வேபர் ரப்பின் தாக்கத்தால் எளிதாக சுவாசிக்க முடியும்.
இருப்பினும், எரிச்சல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஆபத்து காரணமாக இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்த குழந்தை நல மருத்துவர்களால் வேபர் ரப் பரிந்துரைக்கப்படுவதில்லை. உங்கள் குழந்தை வளர்ந்துவிட்டால் வேபர் ரப் கொடுக்கலாமா என்று உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட வேபர் ரப்பை மருத்துவர் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது. இந்தப் பொருட்களில் பெட்ரோலியம் ஜெல்லி, எண்ணெய் மற்றும் யூகலிப்டஸ் காணப்படுகின்றன (ஆனால் கற்பூரம் அல்லது மென்தால் ஆகியவை இல்லை).
பெட்ரோலியம் அல்லது பாராபென் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க விரும்பினால், இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் நீராவி தைலம் ஒரு சிறந்தத் தேர்வாக இருக்கும். ஆயுர்வேத பொருட்களை விற்கும் கடைகளில் நீராவித் தைலத்தை கேட்டுப் பார்க்கலாம் அல்லது ஆன்லைனில் வாங்கலாம். கற்றாழை, மூலிகைகள், எண்ணெய்கள் மற்றும் அத்தியாவசிய எண்ணெய்கள் இந்த தைலங்களின் பொதுவான கூறுகள் ஆகும். இருப்பினும், எந்தவொரு இயற்கைத் தயாரிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை அணுகவும். ஏனெனில் கடுமையான மணம் கொண்ட தைலம் குழந்தைக்கு மூச்சுத் திணறலை ஏற்படுத்தக் கூடும்.
7. உப்பு நீரில் வாய் கொப்பளித்தல் (இதற்கு (Salt Water Gargles (For 4 Years And Up)
4 வயது மற்றும் அதற்கு மேல் ஆக வேண்டும்)
தொண்டை கரகரப்பு ஏற்பட்டால் உப்பு நீரில் வாய் கொப்பளிக்க செய்ய வைக்கலாம். குழந்தை தொண்டையில் உள்ள சளி வெளியேறி, மூக்கு நன்றாக சுவாசிக்க வசதியாக இருக்கும். இந்த சிகிச்சை பலனளிக்கும் என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. ஆனால் விஞ்ஞானிகள் இன்னும் இதை அறுதியிட்டுச் சொல்லவில்லை.
கூடுதலாக, இந்த தீர்வு நேரடியானது. ஒரு கிளாஸ் சூடான நீரில், ஒரு அரை தேக்கரண்டி உப்பை கரைக்கவும். உங்கள் குழந்தை உப்பு நீரில் வாய் கொப்பளித்து விட்டோமே என்ற கருதினால், எலுமிச்சைச் சாறு கொடுத்தால் சரியாகிவிடும்.
வாய்க் கொப்பளித்தலை குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை எட்டிய பிறகு தான் சொல்லித் தர வேண்டும். பள்ளிக்குச் செல்லும் வயதில் வாய் கொப்பளித்தல் அடிக்கடி தேவைப்படும். இருப்பினும், சில பிள்ளைகளால் அதை அதற்கு முன்னும் கூட செய்ய முடியும்.
மூக்கில் உள்ள சளியை அகற்றியவுடன் உங்கள் பிள்ளை மிகவும் நிம்மதியாக இருப்பார். மேலும் சுவாசிக்கவும் நன்றாக தூங்கவும் முடியும். சில குழந்தைகள் 2 வயதில் கூட அதைச் செய்ய முடியும். பெரும்பாலும் அவர்கள் 4 வயதை எட்ட வேண்டும்.
ஒரு நெட்டி பானையைப் பயன்படுத்தி, ஒரு மென்மையான உப்பு கரைசலை நாசி வழியாக செலுத்தி சுத்தப்படுத்தலாம். சளி தளர்த்தப்பட்டு, நீர்த்தப்பட்டு, அப்பகுதி ஈரப்பதமாக ஆகிவிடுவதால் அவை அகற்றப்படுகிறது. இதற்கு மற்றொரு பெயர், "நீர் நெட்டி" என்றழைக்கப்படுகிறது. யோகா பயிற்சியில் நாசி சுத்திகரிப்புக்கான பொதுவான முறையாக இது குறிக்கப்படுகிறது. உண்மையில், இதன் பொருள் "தண்ணீரால் கழுவுதல்", ஆனால் அதை மிகத் துல்லியமாக கூற முடியாது. சில ஆய்வுகள் சலைன் நாசி வாஷ் சொல்யூஷன் சளி அறிகுறியைக் குறைக்க உதவும் என்று கூறுகிறது.
பொதுவாக நெட்டி பானை என்பது பீங்கான் அல்லது உலோகத்தால் தயாரிக்கப்பட்டு, ஒரு சிறிய தண்ணீர் ஊற்றும் கேன் அல்லது டீபாட் போல் இருக்கும். பல மருந்துக் கடைகள், ஆயுர்வேத கடைகள் மற்றும் இணையத்தில் நெட்டி பானைகளை நீங்கள் காணலாம்.
வெறும் வெதுவெதுப்பான நீருக்குப் பதிலாக வெதுவெதுப்பான நீரில் உப்பை கலந்து பயன்படுத்தலாம். உங்கள் குழந்தையின் தலை மேல்பகுதி ஒரு பக்கமாக சாய்ந்திருப்பதால், பானையின் துளி குழந்தையின் நெற்றிக்கு மிக அருகில் உள்ள நாசியில் நுழையும். ஒரு துளி நீர் ஒரு நாசிக்குள் நுழைந்து மற்றொரு புறத்திலிருந்து வெளியேறும். இந்தச் செயல்முறையின் போது உங்கள் குழந்தையை வாயால் சாதாரணமாக சுவாசிக்க நினைவூட்டுங்கள். ஆரம்பத்தில் சவாலானதாக இருந்தாலும், நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்வதன் மூலம் இந்த நடைமுறையில் வெற்றி பெற முடியும். ஒரு பக்கத்தில் வெற்றிகரமாக செய்த பிறகு, மறுபுறமும் அதை மீண்டும் நாம் செய்ய வேண்டும் .
தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு ஆற்றல் தேவைப்படுகிறது. இது குழந்தைக்கு குறைவாக இருக்கும். உங்கள் குழந்தை சிறிது ஓய்வெடுப்பதன் மூலம் தனது வலிமையை மீட்டெடுத்து சீக்கிரம் குணமடையலாம்.
நோய் மற்றும் மன அழுத்தம் அடிக்கடி கைகோர்த்துச் செல்கின்றன. பள்ளி, நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் என எதுவாக இருந்தாலும், குழந்தைக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் எந்த விஷயத்திலிருந்தும் அவர்களுக்கு ஓய்வு தேவை. உங்கள் பிள்ளைக்கு அதை கடக்க ஒரு சுற்றுலா தேவைப்படலாம்.
உங்கள் குழந்தை நாள் முழுவதும் படுக்கையில் இருக்க விரும்பவில்லை என்றால் இயற்கைக்காட்சியைக் காண்பிப்பதற்கு அழைத்துச் செல்வது பயனுள்ளதாக இருக்கும். வானிலை அனுமதித்தால், உங்கள் பால்கனி, வராண்டா அல்லது தோட்டத்தை உங்கள் குழந்தைக்கு உரிய வசதியான இடமாக மாற்றலாம். இருப்பினும் குழந்தையை விட்டு விலகிச் செல்லாதீர்கள்.
பிள்ளைகள் எந்த விதமான அசௌகரியத்தை சந்திப்பதை பார்ப்பது பெற்றோருக்குப் மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியம் உங்கள் குழந்தைகளின் சளி மற்றும் இருமலைச் சமாளிக்க நிச்சயமாக உதவும்.
1. Ashkin E, Mounsey A. PURLs(2013). a spoonful of honey helps a coughing child sleep. J Fam Pract
2.Goldman RD;(2011) Canadian Paediatric Society, Drug Therapy and Hazardous Substances Committee. Treating cough and cold: Guidance for caregivers of children and youth. Paediatr Child Health
10 Amazing Home Remedies for Cough and Cold in Toddlers in English, 10 Amazing Home Remedies for Cough and Cold in Toddlers in Bengali,10 Amazing Home Remedies for Cough and Cold in Toddlers in Hindi, 10 Amazing Home Remedies for Cough and Cold in Toddlers in Telugu
Yes
No


















Hi
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |