

Baby Care
4 February 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
உங்கள் குழந்தைக்கு மசாஜ் செய்வது என்றுமே ஒரு தவறான யோசனை அல்ல. குழந்தைகளுக்கு மசாஜ் செய்வது அவர்களிடத்தில் உள்ள சஞ்சலத்தை குறைத்து, தூக்கத்தை அதிகரிக்க உதவும் என்று முன்னணி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதாவது குழந்தைகள் பற்றி பெற்றோருக்கு இருக்கும் இரண்டு முக்கிய கவலைகளை இது போக்குகிறது. இந்த எளிய மசாஜ் முறைகள், உங்கள் குழந்தைக்கு உடலில் எந்த இடத்தில் மசாஜ் செய்வது பிடிக்கும் என்பதை தெரிந்து கொள்ளவும் உதவும். "மசாஜ் செய்வதற்கு குழந்தைகளுக்கு பிடித்தமான இடத்தை பெற்றோர்கள் பெரும்பாலும் கற்றுக்கொள்கிறார்கள்."
உங்கள் குழந்தையை குளிக்க வைக்கும் போது கை வழுக்காமல் இருக்க, அவர்களை மசாஜ் செய்த பிறகு கைகளில் உள்ள எண்ணெயை ஒரு டவல் கொண்டு துடைத்து விடவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்து எண்ணெய் குழந்தையின் உடலில் உறிஞ்சப்பட்டு விடும் என்பதால் அதனால் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாது.
நாள் முழுவதும் போராட்டமாக செல்லும் போது, மதிய நேர மசாஜ் செய்வது உங்களையும், குழந்தையையும் ரிலாக்ஸாக உணர வைக்கும். அதோடு உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பிணைப்பும் அதிகரிக்கும்.
உங்கள் குழந்தை சாதம் போன்ற திடப்பொருட்களை சாப்பிடத் தொடங்கி இருந்தால், மசாஜ் செய்ய நீங்கள் குழந்தை தனது இரவு உணவை முடிக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஏனெனில், குழந்தை வயிறு நிரம்பி இருக்கும் போது மசாஜ் செய்யக்கூடாது.
நாள் முழுவதும் நீங்களும் உங்கள் குழந்தையும் போதுமான நேரத்தை ஒன்றாக செலவிட முடியவில்லை என்றால், குழந்தையை குளிக்க வைத்த பின் மசாஜ் செய்வது உங்கள் குழந்தையுடன் மீண்டும் இணையவும், ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் உள்ள சிறந்த வழி ஆகும்.
தண்ணீரில் விளையாடுவது உங்கள் குழந்தைக்கு பிடிக்கும் என்றால், அதிலிருந்து வெளியே வந்து உடுப்பு மாற்றிக்கொள்வதை அவர்கள் வெறுக்கலாம்! மசாஜ் என்பது குளிக்க வைக்கும் நேரத்தில் இருந்து தூங்க வைக்கும் நேரத்திற்கு ஒரு மாறுகை போல செயல்படும். இது குழந்தையை ஆறுதல்படுத்த உதவும். குளித்த பின் குழந்தையின் உடல் வெப்பநிலை வேகமாக குறையும். ஆகவே, நீங்கள் மசாஜ் செய்யும் அறை கதுவதப்பாக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். அதோடு சிறந்த பேபி மசாஜ் ஆயில் கொண்டு உங்கள் குழந்தையை மசாஜ் செய்யவும்.
ஒரு சில குழந்தைகள் பேபி மசாஜ் ஆயில் கொண்டு மசாஜ் செய்யும் போது உற்சாகமாக உணரலாம். எனவே நீங்கள் குளிக்க வைத்த பின் மசாஜ் செய்யும் போது, அதற்கு அவர்கள் சரியாக பதிலளிக்காமல் போகலாம். பெரும்பாலான குழந்தைகள், குறிப்பாக சென்சிடிவாக உள்ளவர்ளுக்கு தாங்கள் தூங்கும் முன் பால் மற்றும் அரவணைப்பு மட்டுமே தேவை.
நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய் அல்லது கிரீம் மற்றும் உங்கள் குழந்தையின் சரும நிலை ஆகியவை உங்கள் குழந்தையை நீங்கள் குளிக்க வைக்கும் முன் மசாஜ் செய்ய வேண்டுமா அல்லது குளிக்க வைத்த பின்னர் மசாஜ் செய்ய வேண்டுமா என்பதை தீர்மானிக்கும்.
நீங்கள் ஆலிவ் எண்ணெய், கடுகு எண்ணெய் அல்லது நெய்யைப் பயன்படுத்தலாம்.
ஆலிவ் எண்ணெய், நெய் மற்றும் கடுகு எண்ணெய் ஆகியவை நீண்ட காலமாக பல குடும்பங்களால் பாதுகாப்பாக பயன்படுத்தப்பட்டு வரும் குழந்தைக்கான சிறந்த மசாஜ் எண்ணெய்கள் ஆகும். இருப்பினும், இந்த எண்ணெய்களில் காணப்படும் அதிகப்படியான ஓலிக் அமிலம் சருமத் தடையை பாதிக்கக்கூடும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. உங்கள் குழந்தைக்கு வறண்ட, சென்சிடிவான அல்லது தோலழற்சி இருந்தால் நிலைமை இன்னும் மோசமாகலாம்.
கடுகு எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்றவற்றை உங்கள் குழந்தைக்கான இரவு நேர மசாஜ் எண்ணெயாக பயன்படுத்தினால் குழந்தையின் சருமத்தில் எரிச்சல் ஏற்படலாம். எனவே, இந்த எண்ணெய்களை அகற்ற நீங்கள் சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்த வேண்டி இருக்கும்.
வெப்பநிலையானது புழுக்கமாகவும், அதிகப்படியான வெப்பமாகவும் இருக்கும்போது.
ஒரு சில மருத்துவ நிபுணர்களின்படி, குழந்தையின் சருமத்தில் இருந்து எண்ணெயை அகற்றுவது வியர்வை வெளிவருவதைத் தடுக்கலாம் அல்லது துளைகளை அடைத்து விடலாம். இதனால் இந்த தாங்க முடியாத வெப்பத்தில் குழந்தைக்கு வேர்க்குரு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
உங்கள் குழந்தையின் சருமம் மிகவும் வறண்டு காணப்படும்போது.
உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான எலும்புகளுக்கு மருத்துவர் பேபி மசாஜ் ஆயிலை பரிந்துரை செய்யலாம் அல்லது உங்கள் குழந்தைக்கு வறண்ட சருமமோ, தோலழற்சியோ இருந்தால் வாசனையற்ற லோஷன் பயன்படுத்துமாறு அறிவுறுத்தலாம். மாயிஸ்சுரைஸிங் கிரீம்கள் மற்றும் லோஷன்கள் சருமத்தின் மேல் அடுக்கை மட்டுமே குறி வைக்கின்றன. எனவே, குளிக்கும் போது நீங்கள் அவற்றை அகற்றி விடுவதால் குழந்தையின் சருமத்திற்கு எந்த ஒரு பலனும் கிடைக்காது.
பாதுகாப்பான எண்ணெயை நீங்கள் பயன்படுத்தும் போது உங்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை!
குளிக்க வைத்த பின் உங்கள் குழந்தையின் சருமம் இன்னும் ஈரமாகவே இருக்கும் என்பதால், அப்போது நீங்கள் எண்ணெய் மசாஜ் செய்வது ஈரப்பதத்தை உறிஞ்சவும், தக்கவைக்கவும் உதவும். தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி விதை, அல்லது பேபி (தாதுப் பொருள்) ஆயில் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம். ஆனால் அது குழந்தையின் சருமத்திற்கு பாதுகாப்பானதா என்பதை ஒரு முறைக்கு இருமுறை தெரிந்து கொண்ட பின்னரே பயன்படுத்தவும்.
உங்கள் குழந்தையை நீங்கள் குளிக்க வைக்காத நாளில் கூட அவர்களுக்கு பேபி மசாஜ் ஆயில் கொண்டு மசாஜ் செய்யலாம். வீட்டின் வெளியே மிகவும் குளிராக இருக்கும் போதும் அல்லது உங்கள் குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாத போதும் அவருக்கு உடை மாற்றும் நேரத்தில் ஆயில் மசாஜ் செய்யலாம். உங்கள் குழந்தையை இரவு நேரத்தில் தூங்க வைக்கும் வழக்கத்தில் கூட இந்த மசாஜை சேர்த்து கொள்ளலாம். இது உங்கள் குழந்தையை சௌகரியப்படுத்துவதோடு, அவர்களின் விளையாட்டு நேரத்தில் இருந்து தூங்கும் நேரத்திற்கு மாற்ற இது உதவும்.
When should you massage your baby- before bath or after a bath in Hindi When should you massage your baby- before bath or after a bath in English When should you massage your baby- before bath or after a bath in Bengali
Yes
No

Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips







கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வாயு மற்றும் வயிறு உப்பசத்தை எப்படி கையாள்வது ? (Dealing with Gas & Bloating during pregnancy In Tamil)

பிரசவத்திற்குப் பிறகான ப்ரீக்லாம்ப்சியா_ காரணங்கள், சிகிச்சைகள், நிவாரணத்திற்கான குறிப்புகள்.

ஆனியன் ஆயிலுடன் இயற்கையான முடி பராமரிப்பு முறையை உருவாக்கி தலைமுடிக்கு பொலிவைச் சேர்க்க 3 படிகள் | 3 Steps For Building A Natural Hair Care Regimen With Onion Oil To Add Lustre To Your Hair in Tamil

கர்ப்ப காலத்தில் இரத்தப்போக்கா? அப்படியென்றால் என்ன, எப்போது உங்கள் மருத்துவரை அணுக வேண்டும்? (Bleeding During Pregnancy? What Does It Mean & Should You Consult A Doctor In Tamil)

கர்ப்ப காலத்தில் இடுப்பு வலி: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை(Pain in Groin During Pregnancy: Causes, Symptoms, and Treatment In Tamil)

When Will My Menstrual Cycle Resume After Pregnancy in Tamil |கர்ப்பத்திற்குப் பிறகு எனது மாதவிடாய் சுழற்சி எப்போது மீண்டும் தொடங்கும் ?