


Contraceptive
9 January 2026 அன்று புதுப்பிக்கப்பட்டது
நீங்கள் சமீபத்தில் பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபட்டீர்களா? ஒருவேளை நீங்கள் பயன்படுத்திய ஆணுறை பயனற்றதாக இருக்கலாம் அல்லது காலையில் மாத்திரை சாப்பிடுவதைத் தவறவிட்டிருக்கலாம். உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுப்பது எப்படி என்பதற்கான குறிப்புகளை நீங்கள் இணையத்தில் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்தால், இனி அதைப் பற்றிய பயமோ, கவலையோ வேண்டாம். நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள்.
முதலில், பாதுகாப்பற்ற செக்ஸ் என்றால் என்ன என்று பார்ப்போம். உடலுறவுக்கு முன், உடலுறவின்போது அல்லது அதற்குப் பிறகு எந்தவிதமான கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாமல் பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதைக் குறிக்கிறது. மாதவிடாய் சுழற்சியின் எந்த நாளாக இருந்தாலும், விந்து வெளியேறியதா? இல்லையா? என்பதைப் பொருட்படுத்தாமல், பாதுகாப்பற்ற உடலுறவு கர்ப்பத்திற்கு வழிவகுக்கும்.
நிச்சயமாக, யாரும் திட்டமிடாத கர்ப்பத்தை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அதனால்தான் பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இந்த வலைப்பதிவு உங்களுக்கு விவரிக்கிறது.
உடலுறவு கொள்வதற்கு முன்னும் பின்னும் சிறுநீர் கழிக்க பரிந்துரைக்கப்படுகிறது. உடலுறவுக்குப் பிறகு சிறுநீர் கழிப்பது விந்தணுவின் தடயங்களை அகற்ற உதவுவது மட்டுமின்றி; இது உங்களை UTI தொற்றுவதில் இருந்து தடுக்கிறது. உடலுறவுக்குப் பின் கழிவறையைப் பயன்படுத்திய பிறகு – முன் பக்கத்திலிருந்து பின் பக்கம் வரை - உங்களைத் துடைத்துக்கொள்ள மறக்காதீர்கள்.
உடலுறவுக்குப் பிறகு அவசர கருத்தடை மாத்திரையை ('மார்னிங் ஆஃப்டர்' மாத்திரை அல்லது பிளான் பி என்றும் அழைக்கப்படுகிறது) எடுத்துக்கொள்வது திட்டமிடாத கர்ப்பத்தைத் தவிர்க்க உதவும். நீங்கள் இதைத் தேர்வுசெய்தால், பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட 72 மணி நேரத்திற்குள் மாத்திரையை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மாத்திரையை எடுத்துக் கொண்டால் அது முழுமையாகப் பலனளிக்காது.
இந்த மாத்திரையானது ஸ்பாட்டிங், குமட்டல், உடல்வலி மற்றும் வீக்கம் போன்ற லேசான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். இது உங்கள் சாதாரண மாதவிடாய் சுழற்சியை சீர்குலைக்கலாம். மேலும் உங்கள் அடுத்த மாதவிடாயை சற்று முன்னதாகவே ஏற்படுத்தலாம்.
இருப்பினும், இவை அவசர கால கருத்தடைகள் மற்றும் உங்கள் வழக்கமான பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளுக்கு பதிலாக இவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள் (அவை தினசரி உட்கொள்ளலுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன).
கருப்பையக சாதனம் என்பது காப்பர் மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு சிறிய சாதனம். 'டி' வடிவில் இருக்கும், இது கருப்பையின் உள்ளே வைக்கப்பட்டு, திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுக்க உதவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு ஐந்து நாட்களுக்குள் நீங்கள் IUD ஐ பயன்படுத்தலாம்.
IUD ஐ பயன்படுத்துவது மிகவும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான கருத்தடை முறைகளில் ஒன்றாகும். உட்செலுத்தப்பட்டவுடன், இது ஒரு தொடர்ச்சியான கருத்தடை முறையாகவும் செயல்படுகிறது. அதாவது நீங்கள் திட்டமிடப்படாத கர்ப்பத்தைப் பற்றி குறிப்பிட்ட காலத்திற்கு கவலைப்பட வேண்டியதில்லை.
இருப்பினும், கருப்பை நார்த்திசுக்கட்டி, காப்பர் ஒவ்வாமை மற்றும் வில்சன் நோய் (இரத்தம் உறைவதை கடினமாக்கும் ஒரு கோளாறு) அறிகுறிகளைக் கொண்ட பெண்களுக்கு IUD கள் சிறந்த வழி அல்ல. IUD உங்களுக்கு உகந்த வழியா என்பதை அறிய உங்கள் மருத்துவரை அணுகவும்.
திட்டமிடப்படாத கர்ப்பம் அதிகப்படியான பயம், பதட்டம் மற்றும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே, உங்களை நீங்களே சரிபார்த்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொள்ளவும், இதிலிருந்து வெளியேறவும் உங்கள் துணையுடன் கலந்துரையாடுங்கள். மேலும், இதில் நீங்கள் மட்டும் தனியாக இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நீங்கள் சௌகரியமாக உணரும் மற்றும் உங்கள் சூழ்நிலையைப் புரிந்துகொள்ளக்கூடிய குடும்ப உறுப்பினர் அல்லது நண்பரிடம் பேசலாம். நீங்கள் யாருடனும் பேச முடியாது என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் ஒரு தெரபிஸ்டை அணுகலாம்.
இறுதியாக, ஒரு மகப்பேறு மருத்துவரிடம் பேசுவது மிகவும் உதவியாக இருக்கும்; தகுந்த மருத்துவ ஆலோசனைகளைப் பகிர்வதன் மூலம் அவர்களால் உங்களுக்கு உதவ முடியும்.
இப்போது உங்கள் கேள்விக்கான பதில் உங்களிடம் உள்ளது. உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்ப்பது எப்படி, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்ப பரிசோதனை செய்வதற்கான சரியான நேரத்தை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பலாம்.
பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட 2-3 வாரங்களுக்குப் பிறகு நீங்கள் கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்னதாக கர்ப்ப பரிசோதனையை மேற்கொள்வது நல்லதல்ல. ஏனெனில், உடலில் ஹார்மோன் அளவுகள் கர்ப்பத்தைக் கண்டறியும் அளவுக்கு அதிகமாக இருக்காது.
இதையும் படிக்கலாமே! - பெண்களுக்கான கருத்தடை உறைகளை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.
உடலுறவின் போது ஆணுறை கிழிந்தாலோ அல்லது நழுவினாலோ, உடலுறவுக்குப் பிறகு அவசர கருத்தடை மாத்திரையை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
IUD அல்லது வழக்கமான கருத்தடை மாத்திரைகள் போன்ற பிற கருத்தடை முறைகளை பயன்படுத்த விரும்பினா,ல் முதலில் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிப்பது நல்லது. இறுதி முடிவை எடுப்பதற்கு முன் தகுந்த சோதனைகளை (தேவைப்பட்டால்) செய்து கொள்ளுங்கள்.
இருப்பினும், ஆணுறைகள் பால்வினை நோய்களிலிருந்து சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அவை மாத்திரைகளை விட மிகவும் மலிவானவை மற்றும் எளிதில் கிடைக்கக்கூடியவை. மேலும், உங்கள் ஹார்மோன்களை எந்த வகையிலும் பாதிக்காது.
மொத்தத்தில், திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தடுப்பதற்கும், பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ளவும். அவை சிறந்த வழியாகும்!
Yes
No

Written by
Gajalakshmi Udayar
Get baby's diet chart, and growth tips


அதிக ஆபத்தை கையாளும் மகப்பேறு மருத்துவர் - ஆபத்து & காரணிகள்

சைலண்ட் ரிஃப்ளக்ஸ் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டியவை

உடலுறவுக்கு முன்பே வெளியேறும் திரவம்,இந்த திரவத்தால் கர்ப்பம் தரிக்க வாய்ப்புள்ளதா?

நுரையீரல் அழற்சி vs மூச்சு நுண்குழல் அழற்சி

கர்ப்ப காலத்தில் எலுமிச்சையின் (lemon) நன்மைகள் மற்றும் அபாயங்கள்

பெண் சுயஇன்பம் மலட்டுத்தன்மையை ஏற்படுத்துமா: கட்டுக்கதைகள் மற்றும் தவறான எண்ணங்களை நீக்குதல் I Does Female Masturabation Cause Infertility: Dispelling the Myths and Misconceptions in Tamil